தமிழ்நாடு

கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு

DIN

செங்கல்பட்டை அடுத்த நாவலூர் நத்தம் கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் விக்ரம் (19). இவர், சென்னையை அடுத்த ஏகாட்டூர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு ஆர்கிடெக் படித்து வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை மாலை தனது கல்லூரி நண்பர்களான அருண்குமார், அஸ்வின், ஸ்ரீராம் ஆகியோருடன் நாவலூர் நத்தம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, விக்ரம் நீரில் மூழ்கினார். இதையடுத்து சிறுசேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினரின் அங்கு வந்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு விக்ரமை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தாழம்பூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT