ஒளவையார் விருது பெற பிப்ரவரி 15-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ஒளவையார் விருது மகளிர் தின விழாவில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெற பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் தொண்டு செய்திருக்க வேண்டும். இதுபோன்ற சேவைப்பணி செய்தோர் தங்களது குறித்த முழு விவரங்களுடன் ""மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-1'' என்ற முகவரிக்கு பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.