தமிழ்நாடு

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதுகிறேன்: மதுசூதனன்

தினமணி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், சசிகலாவை முதல்வராக ஏற்க மக்கள் மறுக்கிறார்கள். ஆர்கே நகர் மக்கள் என்னை பார்த்து ஆவேசத்துடன் கேட்கிறார்கள். தவறானவர்களின் கைகளில் அதிமுக சென்றுவிடக் கூடாது.  

ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். 

ஜெயலலிதா மரணத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT