தமிழ்நாடு

எம்எல்ஏக்களுடன் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்: ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு வி.கே. சசிகலா கடிதம்

DIN

சென்னை: தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலர் வி.கே. சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், பிப்ரவரி 9ம் தேதி உங்களை நேரில் சந்தித்து, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினேன்.

அதற்கான கடிதத்தையும், எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மான நகலையும் உங்களிடம் ஒப்படைத்தேன்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை அளித்து அதனை நீங்களும் ஏற்றுக் கொண்டு 7 நாட்கள் ஆகிறது.

எனவே, உடனடியாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும், என்னுடன் வரும் அனைத்து எம்எல்ஏக்களையும், சந்திப்பின் போது அனுமதிக்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகத்தை காக்க முன் வர வேண்டும் என்றும் சசிகலா, ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT