தமிழ்நாடு

ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும்

DIN

தமிழகத்தில் நிலவும் கடுமையான அரசியல் சூழலில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:-
கடந்த 5-ஆம் தேதி முதல் தமிழக அரசியல் சூழல் மிகக் கடுமையான நிலையை அடைந்துள்ளது.
இந்தப் பிரச்னை ஆரம்பித்த பிறகு தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு ஆளுநர் போனதும், மீண்டும் திரும்பிய பிறகு அமைதி காப்பதும் ஏற்கத்தக்கதல்ல.
ஒரு வாரம் கடந்த பின்பும் எந்த முடிவும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவாகக் கூடிய நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் என்ன என்பதை ஆளுநர் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT