தமிழ்நாடு

ஆளுநரைச் சந்தித்த பின் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

DIN

தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவை புதன்கிழமை (பிப்.15) இரவு சந்தித்த பிறகு, தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசிய பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதன்கிழமை இரவு ஆளுநர் நேரம் ஒதுக்கியிருந்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டனர்.
அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், அமைச்சர் பாண்டியராஜன், மூத்த நிர்வாகி சி.பொன்னையன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ அல்லது அவரது ஆதரவு நிர்வாகிகளோ எந்தக் கருத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை.
சந்திப்புக்குப் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT