தமிழ்நாடு

சாலை மார்க்கமாக பெங்களூரு செல்கிறார் சசிகலா..!

DIN

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு சாலை மார்க்கமாக பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
மேலும், இவர்கள் உடனடியாக பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள 48-ஆவது அறையில் செவ்வாய்க்கிழமை நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.

இதனிடையே, உடல்நிலை சரியில்லாததால், நீதிமன்றத்தில் சரணடைய 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எனினும், சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (பிப்.15) சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதனிடையே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்ததும், அவர்கள் மூன்று பேரையும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்படுவார்கள். இதற்காக மத்திய சிறையில் மூன்று பேருக்கும் சிறை அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,

இந்நிலையில், இன்று காலை விமானம் மூலமாக சசிகலா பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் சரணடைவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், தற்போது சாலை மார்க்கமாக பெங்களூரு செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்று வருகின்றன.

மேலும், சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய, இன்னும் நான்கு வார கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT