தமிழ்நாடு

அதிமுக கொறடாவின் உத்தரவு எம்எல்ஏக்களை கட்டுப்படுத்தாது: மாஃபா பாண்டியராஜன்

DIN

அதிமுகவின் கொறடாவால் பிறப்பிக்கப்படும் உத்தரவு எம்எல்எக்களை கட்டுப்படுத்தாது என ஒ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அதிமுகவின் கொறடாவால் பிறப்பிக்கப்படும் உத்தரவை மீறும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாண்டியராஜன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 அமைச்சர்கள் புதிய அரசில் பொறுப்பேற்றுள்ளார்கள்.

ஆனால், எந்தவொரு கொறடாவும் பொறுப்பெடுக்கவில்லை. இனிமேல் பொறுப்பேற்பதற்கும் வாய்ப்பும் இல்லை. இதையடுத்து புதிய அரசை பொறுத்தவரை கொறடாவின் உத்தரவு எம்எல்ஏக்களை கட்டுப்படுத்தாது.

எனவே, அதிமுக எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT