தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி வெற்றி: ஜெயலலிதா சமாதியில் அதிமுகவினர் உற்சாகம்

தினமணி

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி 122 பேர் ஆதரவுடன் பெரும்பாண்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் இன்று காலை முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னதாக காலை 11 மணிக்கு சமாதிக்கு வந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

மாலை 3 மணிக்கு மேல் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ற செயதி வெளியானவுடன் சமாதியில் காத்திருந்த அதிமுக தொண்டர்ள் உற்சாகத்துடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT