தமிழ்நாடு

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்?  எம்.எல்.ஏ. அருண்குமார் விளக்கம்

DIN

தனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால், சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுகவின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.
கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அருண்குமார் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் புறப்பட்டு பெரியநாயக்கன்பாளையம் வந்தடைந்தார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் அதிமுக தொண்டர்கள் அவரை சனிக்கிழமை சந்தித்தனர்.
இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் நிலைமை சரியில்லை. குடும்ப அரசியலுக்கு துணை போகவேண்டாம் என தொகுதி மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
எனவே, எனது மனசாட்சிப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வீடு திரும்பி விட்டேன். பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான் கட்சியில் இல்லை. ஓ.பி.எஸ்., தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT