தமிழ்நாடு

ஊடகவியலாளருக்கு கத்திக்குத்து: இருவர் மீது வழக்குப் பதிவு

DIN

மதுரை: மதுரையில் ஊடகவியலாளரை கத்தியால் குத்திய இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை தபால் தந்தி நகர் காந்திநகரைச் சேர்ந்தவர் சந்திரன்(46). காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தினேஷ், கருப்பசாமி ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக சந்திரன் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT