தமிழ்நாடு

திருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீனவர் படகில் சென்ற சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, மணப்பாடு அருகே படகு சென்றுகொண்டிருந்தபோது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணித்த 30 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான சிலரை மீனவர்கள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காற்றின் வேகம் அதிகரித்தால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 30 சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT