தமிழ்நாடு

எம்எல்ஏக்கள் பேர விவகாரம்:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு

தினமணி

எம்எல்ஏக்கள் பேர விவகாரம் தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் எம்எல்ஏ சரவணன் பேசும் விடியோ ஒன்று ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. 

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி, எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் சிபிஐ தலையிட்டால் உரிமை மீறல் விவகாரமாக மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் சட்டப்பேரவை செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்க திமுக தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT