தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து ரூ. 6.10 லட்சம் திருட்டு

DIN

திருத்தணியில் வீட்டின் கதவுப்பூட்டை உடைத்து ரூ. 6. 10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருத்தணி அக்கைய்ய நாயுடு சாலை தொலைபேசி அலுவலகம் பின்புறத்தில் வசிப்பவர் நாராயணன் (54).
இவர், மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, நாராயணன் குடும்பத்தினருடன் மேல்தளத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை, நாராயணன், கீழ்தளத்தில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவையும் உடைத்து, அதிலிருந்த ரொக்கம் ரூ. 6.10 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT