இலவச மின்சாரம் யாருடைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:
கணேசன் (திமுக): இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான்.
அமைச்சர் ஜெயகுமார்: எம்.ஜி.ஆர்.தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்: எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒரு குதிரை சக்தி மின் மோட்டாருக்கு ரூ.25 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் வரும்போது உங்களால் கூறப்பட்ட வார்த்தைதான் இலவச மின்சாரம்.
அமைச்சர் ஜெயக்குமார்: சட்டப் பேரவையில் ஏற்கெனவே இந்தப் பிரச்னை பற்றி பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001-2006-ஆம் ஆண்டில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது விவாதித்துள்ளேன். இது தொடர்பான அரசு ஆவணங்களையும், அரசாணையையும் காட்டத் தயார். அதற்கு கணேசன் பொறுப்பேற்றால் சரி.
கணேசன்: 1989-90-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.