தமிழ்நாடு

அனில் மாதவ் தவே மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினமணி

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான அனில் மாதவ் தவே, 2009-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர். அனில் மாதவ் தவே தான் வகித்த வந்த அமைச்சர் பதவியில் திறம்பட செயல்பட்டு வந்தவர்.

அனில் மாதவ் தவேவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT