தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

தினமணி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும் மனுதாக்கல் செய்ய டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. 

அதேபோல் மனுவை திரும்பப் பெற டிசம்பர் 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24ல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ கே ஜோதி, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணியுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ள வேலுச்சாமி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் முருகேசன், சுப்பிரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டல உதவி அலுவலரான விஜயகுமார் வாக்காளர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT