தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியை அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்புவோம்: டிடிவி தினகரன்

DIN

சென்னை: அடுத்த வாரத்துக்குள் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எங்கள் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. 

பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக ஆதரவு அளித்த எங்கள் அணியின் எம்எல்ஏக்களையே தகுதி நீக்கம் செய்ய அவர் முயன்றார் என்றால், அவரை இறைவனும், நீதி தேவதையும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும், திமுகவுடன் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறித்த கேள்விக்கு,  திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து மனு தாக்கல் செய்ததில் என்ன தவறு? திமுக தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. திமுகவுடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது என்று பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT