தமிழ்நாடு

காணாமல் போன சிற்றெறும்பாகி விடுவார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்! 

அரசியலில் கமல் காணாமல் போன சிற்றெறும்பாகி விடுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: அரசியலில் கமல் காணாமல் போன சிற்றெறும்பாகி விடுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

தமிழக அரசின் சார்பாக கவிஞர் இளங்கோ அடிகளின் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்குபெற்றனர். நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெய்குமார் பதிலளித்தார். அப்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து கேட்கப்பட்ட பொழுது, அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில்தான் வருவார்.

சுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே..அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி..பின்னர் அரசியலில்  காணாமலே போய் விடுவார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT