தமிழ்நாடு

ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என தீர்மானிப்பவர்கள் மக்களே; கட்சிகள் அல்ல. தமிழகத்தில் அதிமுக அரசுதான் தொடர்ந்து தேசியக்கொடியேற்றும். அதிமுக தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. 

தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என திமுக கூறுவது ஜனநாயக உரிமை. ஆட்சியை கலைப்போம் என கூறியவர்களின் கனவு நிறைவேறவில்லை. உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 

ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. திரைத்துறையில் அவர் சாதித்திருக்கலாம். ஆனால் அரசியலில் ரஜினி கத்துக்குட்டிதான். அரசியல் குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்கத் தாயர். அவர் கட்டணம் கட்டினால் மட்டும் போதும். 

முல்லை பெரியாறு அணை திறக்கப்படும் பட்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT