தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்ளுக்கு அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்ளுக்கு அநேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ மழையும், சோழவரம், கும்மிடிப்பூண்டியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.