தமிழ்நாடு

வருமான வரித்துறை சோதனை: தனியார் மதுபான நிறுவனத்தில் ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

DIN

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் 6 கிலோ கடத்தல் தங்கக் கட்டி வைத்திருந்த ஒரு தொழிலதிபரை கைது செய்தனர்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அதே ஹோட்டலில் தங்கியிருந்த, தங்கக் கட்டி கடத்தலில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இருவர்,அந்த தொழிலதிபரின் உதவியாளர் இருவர் ஆகிய 4 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.1.16 கோடி ஹவாலா பணம், மேலும் ஒரு கிலோ தங்கக் கட்டி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில், தியாகராயநகரில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு இக் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனமும் வரி ஏய்ப்பு,வரி முறைகேடு உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
இதையடுத்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தியாகராயநகரில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தின் அலுவலகம்,பூந்தமல்லி அருகே உள்ள அந்த நிறுவனத்தின் ஆலை, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடு உள்பட 40 இடங்களில் வருமானவரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையை தொடங்கினர்.
ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள்: நான்கு நாள்களாக நடைபெற்ற இச் சோதனை, திங்கள்கிழமையுடன் அனைத்து இடங்களிலும் முடிவடைந்தது. இச் சோதனையில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.54.6 கோடி ரொக்கம், ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், சொத்து ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT