தமிழ்நாடு

திமுக பலவீனமாக உள்ளதால் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

திமுக பலவீனமாக உள்ளதால் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உலக மீனவர் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பழவேற்காட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. இதன்மூலம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

அதிமுகவுக்கு மக்களின் துணை இருக்கிறது. திமுக எத்தனை கூட்டணி வைத்தாலும், எத்தனை பேரை இழுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பலவீனமாக இருப்பதால் திமுக ஆள் பிடிக்கும் வேலையை பார்கின்றனர். இது அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT