தமிழ்நாடு

ரயிலிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு

DIN

கோவை விரைவு ரயிலில் ஈரோடு வந்த கல்லூரி மாணவர் கீழே இறங்கும்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு அருகே மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் கெளரவ்குமார் (19). இவர், வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில் காட்பாடியிலிருந்து ஈரோட்டுக்குப் பயணித்துள்ளார். இந்த ரயில் மதியம் சுமார் 12 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்ததும், ரயிலில் இருந்து கெளரவ்குமார் இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரயில் சக்கரத்தில் சிக்கினார். சுமார் 50 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT