தமிழ்நாடு

நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர வாய்ப்பு

DIN

நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை இரவு 135 அடி உயரத்தை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 
இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.60 அடியாக இருந்தது. தற்போது அணைக்கு விநாடிக்கு 4,670 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் வெளியேற்றம் 2,300 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,539 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 135 அடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
பெரியாறு அணையில் 15 மில்லி மீட்டர், தேக்கடியில் 9 மி.மீ., கூடலூரில் 1.7 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT