தமிழ்நாடு

தமிழகத்தில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 8 செ.மீ., ஓமலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் வழக்கத்தைவிட குறைந்த அளவே மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT