தமிழ்நாடு

அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் பொறியியல் பணி: விரைவு ரயில்கள் இயக்கத்தில் நேர மாற்றம்

DIN

அரக்கோணம் -ஜோலார்பேட்டை பிரிவில் மேல்பட்டி -பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து, வியாழக்கிழமை சில விரைவு ரயில்கள் ஒருசில ரயில் நிலையங்களில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1. யஸ்வந்த்பூர் -ஹவுரா ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.
2. யஸ்வந்த்பூர் -ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் விண்ணமங்கலத்தில் 45 நிமிடம் நிறுத்தப்படும். 
3. பெங்களூரு -காக்கிநாடா டவுன் சேஷாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். 
4. பெங்களூரு -சென்னை சென்ட்ரல் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும்.
5. பெங்களூரு -சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், விண்ணமங்கலத்தில் 10 நிமிடம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT