ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே நல்ல முடிவு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டபவர்கள் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில்,
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது
என்று மாநில அரசும்,
பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது
என்று மத்திய அரசும்,
போராட்டம் முடிவுக்கு வந்தது
என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான்
நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.