தமிழ்நாடு

உடற்கூறு ஆய்வு அறிக்கையை பார்த்த பிறகே உடல்கள் ஒப்படைக்கப்படும்

DIN

தனது மகனின் உடலை ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உடற்கூறு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னரே உடல்களை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வழக்குரைஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன் மற்றும் பாவேந்தன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றம் செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மகனின் உடலை...இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடி மாவட்டம் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த பாலையா தாக்கல் செய்த மனுவில், ஆடிட்டரான எனது மகன் சண்முகம், பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்ததார். ஆசிரியர் காலனியில் உள்ள எங்களது வீட்டைப் பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏடிஎம்மில் பணம் எடுத்து வரச் சென்ற எனது மகனும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி விட்டார். எனவே எனது மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்ய ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
அறிக்கைக்குப் பின்... இந்த மனு நீதிபதிகள் டி.ரவீந்திரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உடற்கூறு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னரே உடலை ஒப்படைப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். 
இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT