தமிழ்நாடு

குற்றாலத்தில் குளிக்க தடைநீக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை இரவு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT