பேனர் விவகாரம்: இதுபோன்ற தவறு நடக்காது - உதயநிதி ஸ்டாலின் தகவல்
பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்
சென்னை: பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டுவிட்ரில் குற்றம்சாட்டி இருந்தது.
வானகரத்துக்கு இளவரசர் வர்றாராம். எந்த ஊரு இளவரசர்? பேனர் வேண்டாம் பேனர் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பேனர் வைத்துக்கொள்வது ஒரு கலை. ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.