தமிழ்நாடு

பாஜகவை வீழ்த்த பாஜகவே போதும்

DIN

பாஜகவின் ஆட்சியை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவையில்லை, பாஜகவினரே போதும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
 காங்கிரஸ் கட்சியின் தெற்கு மண்டல மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பார்வையாளர்கள் கூட்டம் சத்தியமூர்த்திபவனில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். தமிழக மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலை வகித்தார்.
 அடுத்த பிரதமர் ராகுல்தான்: கூட்டத்தில் சஞ்சய் தத்தும், திருநாவுக்கரசரும் பேசியதாவது: கோஷ்டிப் பூசலை கைவிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான். காங்கிரஸார் அனைவரும் முழு வீச்சுடன் செயல்பட வேண்டும் என்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறியது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகுதான் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களையும் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
 பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக மக்கள் கொதிப்பில் உள்ளனர். பாஜகவை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவையில்லை. பாரதிய ஜனதா கட்சியினரே போதும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் எனக்கும் எந்தவித மோதலும் இல்லை. இருவரும் ஒருங்கிணைந்துதான் செயல்பட்டு வருகிறோம் என்றார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT