சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் வடிவமைப்பில் பெரும் சர்ச்சை எழுந்தது. சிலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை போன்று இல்லை என்று பரவலாக விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், சிலையை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்தது. சிலையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்தார். இதைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலையானது அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி நிறுவப்பட்டது.
இந்தச் சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.