தமிழ்நாடு

சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது: எடப்பாடி கே.பழனிசாமி

DIN

சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துளளார். 

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழக்கு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,
சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. 

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா. அண்ணா, எம்ஜிஆரின் லட்சியங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT