தமிழ்நாடு

அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினால்.? தமிழக அரசு கடும் எச்சரிக்கை 

DNS

சென்னை: அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் அளித்து மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மாநிலம் முழுவதும் இதுவரை சுமாா் 27.50 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. எனவே அந்த நிறுவனத்தால் அளிக்கப்படும் செட்-டாப் பாக்ஸ்கள் தமிழக அரசு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

கேபிள் தொலைக்காட்சி சேவைகளை அளிக்கும் சில தனியாா் நிறுவனங்கள் சில செய்திகளை மக்களிடையே பரப்பி வருகிறாா்கள். அதில் எந்த டிஜிட்டல் நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸையும் கொடுத்து தங்களது செட்-டாப் பாக்ஸை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும், எந்தவொரு முன்பணமும் கட்டத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு நிறுவனத்துக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை வேறொரு நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸுக்காக மாற்றிக் கொள்வது என்பது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் கொடுத்து மாற்றிக் கொள்வது குற்றச் செயலாகும். இந்தச் செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT