தமிழ்நாடு

உடல் நலக்குறைவு: திருமுருகன்காந்தி மருத்துவமனையில் அனுமதி

DNS

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டாா்.

சென்னை ராயபுரத்தில் அனுமதியின்றி ஊா்வலம் நடத்தியதுடன், கலவரம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். 

கடந்த ஒரு மாதமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு கடந்த இரு நாட்களாக வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சிறை மருத்துவா்கள் திருமுருகன்காந்திக்கு சிகிச்சை அளித்துள்ளனா். எனினும், அவருக்கு வயிற்றுப்போக்கு குணமாகவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், திருமுருகன்காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை கடுமையான வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவருக்கு அல்சா் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனா். 

மேலும், மருத்துவ பரிசோதனைக்காக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பரிந்துரை செய்துள்ளனா்.

இதையடுத்து, திருமுருகன்காந்தியை வேலூா் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மணி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மதியம் ஒரு மணியளவில் திருமுருகன்காந்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், சிறையில் என்னை தனிமைப்படுத்தியுள்ளனா். நான் யாரிடமும் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT