தமிழ்நாடு

அழகிரி தனித்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்விளைவு இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

DIN

அழகிரி தனித்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்விளைவு இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விட்டின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்படும். 

எதிர்கட்சிகளை கூட நாங்கள் வரம்புமீறி பேசுவது இல்லை. எங்கள் நாக்கை வெட்டாமல் இருந்தால் சரி. அழகிரி தனித்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்விளைவு இல்லை, முன்விளைவுதான் என்றார். 

அதிமுக அரசை பற்றி தரகுறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் என தஞ்சாவூரில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியிருந்தார். அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT