தமிழ்நாடு

மாதம் ரூ.1500 நிதி உதவி: அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

DIN


சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500 நிதி உதவி வழங்கப்படும் என்கிற அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

17-வது மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து. 

இதனை எதிர்த்து தேனியை சேர்ந்த அமாவாசை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT