தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது

DIN

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. 

தமிழகத்தில், சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு மே 19-இல் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அதிமுக, அமமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு, திங்கள்கிழமை (ஏப்.22) வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையல் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு விநியோம் நடைபெறுகிறது. 

ரூ25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்பமனுவை பெற்று பூர்த்தி செய்து இன்று மாலை 5 மணிக்குள் தர வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT