தமிழ்நாடு

19 ஆண்டுகளாக கழிப்பறையில் தனியாக வசித்து வரும் மூதாட்டி! 

Muthumari

மதுரை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, கடந்த 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசித்து வருகிறார். அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் அங்கு சிறுநீர் கழிக்க வரும் பொதுமக்கள் தரும் கட்டணம் தான் அவருக்கு வருமானம். 

இதுகுறித்து அவர் கூறும்போது,  "எனக்கு 65 வயதாகிறது. அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தத்துடன், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்தேன். பலமுறை போராடியும் கிடைக்காததால் பின்னர் விட்டுவிட்டேன். கடந்த 19 ஆண்டுகளாக நான் கழிப்பறையில் தான் வசித்து வருகிறேன்.

கழிவறைகளை சுத்தம் செய்வது தான் வேலை. ஒரு நாளைக்கு 70 முதல் 80 ரூபாய் வரை கிடைக்கும். அதைவைத்து தான் நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், அவர் என்னை வந்து சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. நான் தனிமையில் தான் வசித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு அரசின் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT