தமிழ்நாடு

தருமபுரியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ. 1.50 லட்சம் கொள்ளை

DIN

தருமபுரி அருகே கோட்டப்பட்டியில் டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் சிட்டானூர் பகுதியில் கோட்டப்பட்டியில் டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ. 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 

காலில் குண்டடிப்பட்ட டாஸ்மாக் ஊழியர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தி நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக, தருமபுரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT