திராவிடர் கழகத் தலைவர் வீரமணி - திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25-7-2019) காலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு, 7-8-2019 அன்று முரசொலி வளாகத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அளித்தார்.
Advertisement
Advertisement
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.