காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பதவிவகித்து வந்தார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் இவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுதியது குறிப்பிடத்தக்கது.