தமிழ்நாடு

உள்தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

DIN


உள்தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை  வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை  வறண்ட வானிலை காணப்படும். மேலும், உள் தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட 2  முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. 
குறிப்பாக, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக  35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார்  அவர்.
5 இடங்களில் வெயில் சதம்: 
தமிழகத்தில் 5 இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 104  டிகிரி வெப்பநிலை பதிவானது. 
தருமபுரி, மதுரை விமானநிலையம், நாமக்கல், சேலத்தில் தலா 100 டிகிரியும், திருச்சியில் 99 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT