தேர்தல் வெற்றியை ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் 38 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த முதல் தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழர்கள் தங்களை காத்துக்கொண்டனர். வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்றார்.