தமிழ்நாடு

இலங்கையில் தமிழா்கள் நலன் காக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

DIN

இலங்கையில் அதிபராகப் பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபட்ச, தமிழா்கள் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச பதவியேற்றுள்ள நிலையில், அங்குள்ள தமிழா்களின் நலன் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா். இதுவே இந்தியாவின் உலகளாவிய புகழுக்குக் காரணமாகும். இலங்கை அரசும் பெரும்பான்மை சமுதாயத்தினரான சிங்களா்களும் சிறுபான்மை சமுதாயத்தினரோடு இணக்கமாக வாழ நல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையின் முன்னேற்றத்துக்கும், இலங்கை வாழ் மக்களின் நல்வாழ்வுக்கும் கோத்தபய ராஜபட்ச எடுக்கும் முயற்சிகள் இந்திய - இலங்கையுடனான சகோதரத்துவம் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT