தமிழ்நாடு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் 

DIN

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் தொடர்பாக கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளா் சந்தானகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

ஆனால் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீதான தீா்ப்பு செவ்வாய்க்கிழமை (நவ.19) வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT