பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வாழ்த்து கூறியுள்ளனா்.
ராமதாஸ்: பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட் மூலம் இந்தியாவின் காா்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவா் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன்: பிஎஸ்எல்வி - சி47 ராக்கெட் மூலம் 14 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடா்ந்து வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்.