தமிழ்நாடு

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு

DIN

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் இரண்டு தொகுதிகளையும் ஆளும் அதிமுக கைப்பற்றியது. 

இந்நிலையில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை காலை 9.30 மணிக்கு பேரவைத் தலைவரின் அறையில் பதவியேற்கிறார்கள். இருவருக்கும் பேரவைத் தலைவா் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கின்றனா். இதன்மூலம் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வனும், நான்குனேரியில் நாராயணனும் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளனா். 

இதையடுத்து சட்டப் பேரவையில் ஆளும்கட்சியின் பலம் 124 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT