தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு

DIN


 மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் தீபாவளி பண்டிகை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலில் தினசரி அதிகாலை நடை திறந்ததில் இருந்து இரவு  நடை சாத்தும் வரை  இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. கோயிலில் வரும் தீபாவளித் திருநாள்(அக்டோபர் 27) முதல் லட்டு பிரசாத விநியோகம் அமலுக்கு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்குவதற்காக  ரூ.5 லட்சம் மதிப்பில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT